எம்.ரிஷான்ஷெரீப், இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், கவிஞரும், ஊடகவியலாளரும் ஆவார். மொறட்டுவ பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பட்டம் பெற்றுள்ள இவர் கவிதை, சிறுகதை, ஓவியம், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, புகைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், திறனாய்வு போன்ற பல துறைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
தொடர்புக்கு – mrishanshareef@gmail.com
இதுவரைவெளிவந்துள்ளஇவரதுதொகுப்புக்கள்
- ‘வீழ்தலின் நிழல்‘ (கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், முதற்பதிப்பு – 2010, இரண்டாம் பதிப்பு – 2013)
- ‘அம்மாவின் ரகசியம்‘ (மொழிபெயர்ப்பு நாவல், காலச்சுவடு பதிப்பகம், 2011) – 2011 இல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச சாகித்திய இலக்கிய விருது.
- ‘தலைப்பற்ற தாய்நிலம்‘ (மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு, எழுநா – நிகரி பதிப்பக வெளியீடு, 2013) – கவிஞர் ஃபஹீமா ஜஹானுடன் இணைந்து மொழிபெயர்த்த, சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் சிங்களக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு.